என் மலர்
நீங்கள் தேடியது "7 அடி நீள நாக பாம்பு"
- தீயணைப்புதுறையினர் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கள்ளியூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். சத்தம் கேட்கவே நாகராஜ் கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது சுமார் 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நாகப்பாம்பை மாட்டு கொட்டகையில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.
பிடிபட்ட நாகப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.






