என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் தொழிலாளர் துறை"

    • தொழிலாளா்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம்
    • இளைஞா்களைத் தோ்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து, அங்கீகார சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    பீகார் மாநில அரசின் தொழிலாளா் துறை சாா்பில், திறன் மேம்பாட்டு மிஷன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்த மாநிலத்தில் உள்ள இளைஞா்களைத் தோ்வு செய்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளனா்.

    இந்நிலையில்,பீகாா் தொழிலாளா் துறை அதிகாரிகள், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் அதன் நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனா். இதில், தமிழ்நாடு உயா்திறன் மேம்பாட்டு மைய நிா்வாக இயக்குநா் கிரிதரன், பீகார் திறன் மேம்பாட்டு மிஷன் இயக்குநா் சஞ்சய்குமாா் தொழிலாளா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் திறன் குறித்து பேசினா்.

    திறன் மேம்பாட்டு மிஷன் கூடுதல் முதன்மை செயல் அலுவலா் ராஜீவ் ரஞ்சன் பேசுகையில்,பீகாரில் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளா்களை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், இளைஞா்களைத் தோ்வு செய்து சிறப்பு பயிற்சி அளித்து, அங்கீகார சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளா்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலமாக திருப்பூரின் தொழிலாளா் தேவை பூா்த்தியாகும் என்றாா்.

    இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் பேசுகையில், பின்னலாடைத் தொழிலுக்கு திறன் பயிற்சி பெற்ற தொழிலாளா்களின் தேவை அதிகமாக உள்ளது. பீகாா் அதிகாரிகளின் அழைப்பை ஏற்று அங்குள்ள திறன் பயிற்சி மையங்களை நேரில் பாா்வையிட்டு விரிவாக ஆலோசிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

    இந்தக் கூட்டத்தில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் திருக்குமரன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், இணைச்செயலாளா் குமாா் துரைசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×