என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வீடு"

    • தனியார் வீட்டில் நரிக்குடி அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
    • புதிய கட்டிடம் கட் டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்க–ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவ–லகம் அருகேயுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்புறம் குழந்தைகளுக் கான அங்கன்வாடி மையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் செயல்பட்டு வந்தது. பல வரு–டங்களாக மின்வசதி–யின்றியே இயங்கியது. இங்கு 5 வயதிற்கு உட்பட்ட குழந் தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பயன–டைந்து வந்தனர்.

    மேலும் குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் அங்கன்வாடி மையத்தின் சுவர்களில் படங்கள், ஓவியங்கள் மூல–மாக அங்கன்வாடி ஆசிரி–யர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தனர். இதனால் ஆரம்ப பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் கல்வி முன் னேற்றமடைந்தது.

    இந்த நிலையில் கட்டிடத் தின் வகுப்பறை, மேற்கூறை மற்றும் சமையலறை உட்பட கட்டிடத்தின் பெரும்பா–லான பகுதிகள் இடிந்து அதன் காரணமாக அங்கன் வாடி மையத்திற்குள் பாம்பு–கள், விஷ பூச்சிகள் உள்ளிட் டவைகள் புகுந்து குழந்தைக–ளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அங்கன்வா–டிக்கு பெற்றோர்கள் குழந் தைகள் அனுப்ப தயக்கம் காட்டி வந்தனர். இதனால் அங்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாக குறைந்தது.

    இந்த நிலையில் அங்கன் வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டி குழந்தை–களின் பெற்றோர்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புதிய கட்டிடம் கட்ட நடவ–டிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இத–னால் தற்போது யூனியன் அலுவலகத்திற்கு பின்புற–மாக கடந்த 2 வருடங்களாக தனியார் வீட்டில் இயங்கி வருகிறது.

    இங்கும் குழந்தைகளுக் கான குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வச–திகள் இல்லாததால் அங்கன் வாடிக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆசிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகி வரு–கின்றனர். மேலும் இதே நிலை நீடித்தால் குழந்தை–களின் எண்ணிக்கையும் நாளைடைவில் வெகுவாக குறைந்து விரைவில் அங்கன் வாடி மையத்திற்கு மூடுவிழா காணும் நிலை ஏற்படுமெ–னவும் குழந்தைகளின் பெற் றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட கலெக் டர் உடனடியாக பழைய கட்டிடத்தை ஆய்வு மேற் கொண்டு நரிக்குடி அங்கன் வாடி மையத்திற்கு விரை–வில் புதிய கட்டிடம் கட் டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்க–ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×