என் மலர்
நீங்கள் தேடியது "8 ரவுடிகள் கைது"
- பொன்காளியம்மன் கோவி ல் அருகே சந்தேகப்படும்படி 8 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது.
- போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்கள் இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 8 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
பழனி:
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதைய டுத்து குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையி லான போலீசார் பழனி பாண்டியன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். பொன்காளியம்மன் கோவி ல் அருகே சந்தேகப்படும்படி 8 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது.
அதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்கள் இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 8 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்க ள் பழனி சிவகிரிப்பட்டியை சேர்ந்த முத்து (வயது 26), தனுஷ்குமார் (19), ஆயக்கு டியை சேர்ந்த அர்ஜூன்கு மார் (19), கண்ணன்குமார் (28), ராம்குமார் (20), மதுரை மாவட்டம் கீழமுத்துப்ப ட்டியை சேர்ந்த சரவணன் (23), பிரேம்நாத் (22) மற்றும் பழங்காநத்தத்தை சேர்ந்த சரவணன் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் பழனி பகுதியில் கொள்ளை சதியை அரங்கேற்ற இருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதில் முத்து மீது அடிதடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.






