என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொடக்குறிச்சி தாசில்தார்"

    • பிற சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பங்களில் வரி மற்றும் நன்கொடைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • உத்தரவு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முறையீடு செய்தும், அல்லது உரிய நீதிமன்றத்தை அணுகலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட அவல்பூந்துறை கஸ்பாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியகாண்டியம்மன், அண்ணமார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கீழ் 27 உபகோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் குறிப்பிட்ட சமுதாயத்திலிருந்து வேறு சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள 70 குடும்பங்களை ஒதுக்கி வைத்து வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சட்டத்திற்கு புறம்பான தடையிலிருந்து விடுவித்து வழிபாட்டு உரிமையை பெற்று தரக்கோரி ஈரோடு கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர்.

    இந்த மனு தொடர்பாக இரு தரப்பினருடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தாசில்தார் இளஞ்செழியன் கூறியதாவது:-

    ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை எந்த ஒரு காரணத்திற்காவும் கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பது தவறான நடைமுறை, சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

    பிற சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பங்களில் வரி மற்றும் நன்கொடைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். மகாசபை கூட்டம், சுப நிகழ்ச்சிகள், அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பு ஏதுவும் தெரிவிக்க கூடாது.

    மேலும், அவர்களுக்கு சமுதாய வழக்கப்படி சீர் மற்றும் சடங்கு செய்யும் நிகழ்வுகள், குலதெய்வ வெண்கல சிலை வழிபாடு போன்றவற்றில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவிக்க கூடாது என உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள் உபகோவில் நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்குள் கலந்து பேசி, இனி வரும் காலங்களில் மேற்படி தலைமை கோவில்கள் மற்றும் உப கோவில்களில் இந்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளை தவிர்ப்பதற்கும், அனைவரும் சட்ட ரீதியான சமமான உரிமை வழங்கிட ஆவண செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது.

    இந்த உத்தரவு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முறையீடு செய்தும், அல்லது உரிய நீதிமன்றத்தை அணுகலாம்.

    இவ்வாறு தாசில்தார் இளங்செழியன் கூறி உத்தரவிட்டார்.

    ×