என் மலர்
நீங்கள் தேடியது "நீதிபதி தேர்வு"
- சிவில் நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் வக்கீல் சங்கம் சார்பாக சிவில் நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி தேர்வு எழுத உள்ள வக்கீல்களுக்கு குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் என்ற தலைப்பில் வக்கீல் செந்தில்குமார் பயிற்சி அளித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் திருச்சி சட்டக் கல்லூரி பேராசிரியர் இன்பசேகரன் பயிற்சி அளித்தார்.
திண்டுக்கல் வக்கீல் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.






