என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிய வெற்றி வேல்"

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்: 

    சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் கமண்டல நதிக்கரையில் உள்ள கிராம தேவதை பொன்னியம்மனுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு திரளான பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் நாராயணமங்கலம் கிராமத்தில் கருங்குன்றில் அமைந்துள்ள வெற்றி வேல் முருகன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிய வெற்றி வேல் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழபட்டனர்.

    ×