என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர்-முதுமலை"

    • புலியின் நடமாட்டத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர்.
    • சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்ப கத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெ ருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.

    இந்த நிலையில் ஒருசில சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் இருந்து கூடலூருக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

    அப்போது கூடலூர்-தெப்பகாடு சாலையில் உள்ள பாலம் அருகே, ஒரு புலி உலா வந்தது. அது ரோட்டில் இங்கும் அங்குமாக சிறிது நேரம் ஓடி விளையாடியது. அதன்பிறகு அந்த புலி வனப்பகுதிக்குள் பாய்ந்தோடி சென்றது.

    கூடலூர்-முதுமலை ரோட்டில் புலியின் நடமாட்டத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து பகிர்ந்தனர். இது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    குன்னூா் வன சரகத்துக்கு உட்பட்ட மவுண்ட் பிள சண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியை சுற்றிலும் சோலைகள் நிறைந்து உள்ளன. எனவே அங்கு வனவிலங்குகள் நடமா ட்டம் அதிகமாக இருக்கும்.இந்த நிலையில் ஒரு சிறுத்தைப்புலி நள்ளி ரவு நேரத்தில் மவுண்ட்பி ளசண்ட் பகுதிக்கு வந்தது. இது அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    இது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தைப்புலியால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக அதனை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனா்.

    ×