என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் இணைப்பு குழு"

    • மாநாட்டில் 80 சதவீத விவசாய வேலைகளில் ஈடுபடும் பெண் விவசாயிகளுக்கு விவசாயி என்று தகுதி அளித்து அதற்கான அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட 11 கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
    • தொடர்ந்து மாநாட்டில் சிறு தானிய கண்காட்சிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    நத்தம்:

    நத்தத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் மாநில மாநாடு நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஷீலு தலைமை தாங்கினார். பெண்கள் இணைப்பு குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராதேவி, குழு உறுப்பினர் திருவண்ணாமலை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெண்கள் இணைப்பு குழு உறுப்பினர் அனுசுயா வரவேற்றார்.

    மாநாட்டில் 80 சதவீத விவசாய வேலைகளில் ஈடுபடும் பெண் விவசாயிகளுக்கு விவசாயி என்று தகுதி அளித்து அதற்கான அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட 11 கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

    தொடர்ந்து மாநாட்டில் சிறு தானிய கண்காட்சிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பொன்னுத்தாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், மக்கள் சட்ட உரிமை இயக்க மாநில தலைவர் அண்ணாத்துரை, இலக்கிய பெருமன்ற தலைவர் வெள்ளைச்சாமி, மாநில துணை செயலாளர் ஜோதி உள்ளிட்ட பலர் பெண்களும், சிறு தானியமும் என்ற தலைப்பை வலியுறுத்தி பேசினார்கள். செயற்குழு உறுப்பினர் ரெங்கநாயகி நன்றி கூறினார்.

    ×