என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சர்க்கரை நோய்"

    • இலவச சர்க்கரை நோய்-கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடந்தது.
    • இதில் 800-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மதுரை

    மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ அறக்கட்ட–ளையும் இணைந்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோகிலா வித்த மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இல–வச சர்க்கரை நோய் பரிசோ–தனை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தியது.

    முகாமில் கலந்துகொண்ட நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு மற்றும் கண் விழித்திரை பரிசோ–தனை டாக்டர் ஜெ.ஜெய–வெங்கடேஷ் முன்னிலை–யில் நடந்தது. டாக்டர்கள் மோகித் ஷர்மா, சர்தா ஷா, பவித்ரா, சுபலெட்சுமி, பிரியங்கா மற்றும் நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர் ராஜ–சேகரன் ஆகியோர் நோயா–ளிகளுக்கு பரிசோதனை–களை மேற்கொண்டனர்.

    இதில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×