என் மலர்
நீங்கள் தேடியது "மொகரம் ஊர்வலம்"
- கொடி வைத்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
- போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி அருகே உள்ள பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில் மொகரம் ஊர்வலம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் அந்த கிராமத்து இளைஞ்சர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் இரும்பிகளில் கொடிகளை கட்டி வந்தனர்.
அந்த கொடிமேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியது. இதனால் கொடி வைத்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
- வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் விசாரணைக்காக போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜார்கண்ட் மாநிலம் மேதினிநகர் மாவட்டத்தில் உள்ள பலமுவில் செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மக்கள் ஏந்தப்பட்டு வந்த மூவர்ணக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தைகளால் மாற்றப்பட்டிருந்தது.
இதன் வீடியோ சமூக வலைத்த வைரலானது. மேதினிநகர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதற்கு கீழே ஒரு வாள் சின்னம் இருந்தது.
இந்த காட்சியை வீடியோ எடுத்த மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் விசாரணைக்காக போலீஸ் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ரிஷப் கார்க் கூறுகையில், "தேசியக் கொடியை அவமரியாதை செய்வது சட்டப்படி குற்றமாகும். சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.






