என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் மோதி வாலிபர் சாவு"

    • ஆதிகேசவன் (17), தேவராஜ் (22) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • தட்சினாமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர் இவரது மகன் தட்சினாமூர்த்தி (வயது22). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இவர் நேற்று மகேந்திரமங்கலத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்தார். அப்போது உறவினர்களாக ஆதிகேசவன் (17), தேவராஜ் (22) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது போயர்சாலை அருகே வந்த போது சாலையோரம் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின்புறம் மோதினார்.

    இதில் தட்சினாமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இருவர் படுகாய மடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்கைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தட்சினா மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×