என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்"

    • மின்சார டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப் பட்டுள்ள நிலையில் அந்த டிரான்ஸ்பார்மரை நிலத்திற்கு சொந்தக்காரர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது.
    • குடிதண்ணீர் இன்றி மக்கள் மற்றும் கால்நடைகள் பெறும் அவதிப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருபரள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக அப்பகு தியில் மின்சார டிரான்ஸ் பார்மர் அமைக்கப் பட்டுள்ளது. இந்த மின்சார டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப் பட்டுள்ள நிலையில் அந்த டிரான்ஸ்பார்மரை நிலத்திற்கு சொந்தக்காரர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதை அடுத்து அங்கு உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீர் இன்றி மக்கள் மற்றும் கால்நடைகள் பெறும் அவதிப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் குடிதண்ணீர் என்று பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×