என் மலர்
நீங்கள் தேடியது "நடைபாதை சீரமைப்பு"
- மார்க்கெட்டை சுற்றிலும் 6-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது.
- ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு நடை பாதைகள் சீரமைக்கப்பட்டன.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை முழுவதும் இரு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மார்க்கெட்டை சுற்றிலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குழந்தைகள் பயிலும் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 6-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன . காலையிலும், மாலையிலும் பள்ளி குழந்தைகள் செல்லும் மார்க்கெட் சாலையானது இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. நடைபாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பராமரிப்பின்றி கிடந்தது.
இதுதொடர்பாக கோத்தகிரி நீலமலை அனைத்து வாகனப் பிரிவு ஓட்டுநர்கள் நெடுஞ்சாலை த்துறை அலுவலகத்திற்கு மனு கொடுத்தனர். அதில் பள்ளி குழந்தைகள் இந்த பிரதான சாலையில் செல்கின்றனர்.
நடைபாதைகள் இரு பக்கம் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் நிறுத்த ப்பட்டு வருவதால் பள்ளி குழந்தைகள் சாலையின் நடுவில் செல்கின்றனர். வாகனங்கள் அதிகமாக செல்வதால் அவர்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் முட்புதர்களால் நடைபாதை மூடி கிடக்கிறது. எனவே இதனை சரி செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இதையடுத்து தலைமை சாலை பொறியாளர் சங்கரலால் மற்றும் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை இருக்கும் சாலைகளை சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்க ப்பட்டு நடை பாதைகள் சீரமைக்கப்ப ட்டன. சாலை பாதுகாப்பு ஆய்வாளர் ஜெயக்குமார் மேற்பார்வை யில் நீலமலை அனைத்து ஓட்டுநர் சங்கத்தினரும் ஒன்றிணைந்து மார்க்கெட் சங்க ஓட்டுனரின் வாகனங்களைக் கொண்டே அனைத்து குப்பைகளும் அகற்றி நடைபாதை ஏற்படுத்தியது அனைவரது பாராட்டையும் பெற்றது. பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






