என் மலர்
நீங்கள் தேடியது "ஏக்கத்தில்"
- உறவினரகள் சுதாகரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- மனக்குழப்பத்தில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதி நெல்லிபழஞ்சிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகன் சுதாகர் (32). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனக்குழப்பத்தில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு ஏதோ விஷ மருந்து குடித்துள்ளார் .மறுநாள் காலையில் வாந்தி எடுத்த போது, விஷ வாடை வீசியதால் சந்தே கமடைந்த உறவினரகள் சுதாகரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிசிட்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, உள் நோயாளியாக சிகிட்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிட்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக சுதாகரின் தாயார் பால்தங்கம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






