என் மலர்
நீங்கள் தேடியது "நேபாள வாலிபர்"
- டம்பார் தாமி வேலை தேடி கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார்.
- போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
நேபாளத்தைச் சோ்ந்தவர் தேவ். இவரது மகன் டம்பாா் தாமி (வயது20). இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
இந்த நிலையில் டம்பார் தாமி வேலை தேடி நீலகிரி மாவட்டம், கோத்தகிரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே அவருடன் வந்த உறவினா் ஒருவர் ஊட்டியில் உள்ளார். அவர் இவரை தொடர்பு கொண்டு ஊட்டிக்கு வந்து வேலை தேடு என கூறினார்.
இதையடுத்து, டம்பார் தாமி கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார். இது தொடர்பாக தனது உறவினரிடமும் செல்போனில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து அவரது உறவினர் கோத்தகிரி வந்து தேடி பார்த்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோத்தகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டம்பார் தாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது அது மாயமான டம்பார் தாமி என்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






