என் மலர்
நீங்கள் தேடியது "பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்க முடியாது"
- மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் அருகே தென்மாம்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 40), விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைக்கோல் எடுக்கும்போது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென் றனர். அப்போது சுகாதார நிலையத்தில் பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்க முடியாது. நீங்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவம
னைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. பின்பு மாதவனை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், தென்மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கோஷங் களை எழுப்பினர்.
இதையறிந்த சுகாதாரதுறையினரும், நெமிலி போலீசாரும் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






