என் மலர்
நீங்கள் தேடியது "இந்துஸ்தான் பெட்ரோலியம்"
- கச்சா எண்ணெய் உற்பத்தியை அந்நாடுகள் குறைத்து விட்டன.
- உலகின் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைது விட்டது.
ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி அரேபியா, ஈராக், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, ஈரான் மற்றும் ஓமன் இடையிலான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களில் செல்கிறது. உலக கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் அந்த வழியாக செல்கிறது.
ஆனால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. அதனால் அந்த வழியாக கப்பல்கள் செல்வது இல்லை. அந்நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
மேலும், இந்த போர், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளையும் சூழ்ந்து விட்டதால், உற்பத்தி குறைந்து விட்டது.
ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கச்சா எண் ணெய் ஏற்றுமதி செய்ய முடியாதநிலையில், சேமிப்பு கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தியை அந்நாடுகள் குறைத்து விட்டன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. அதனால் ஈரானில் இருந்து நாள்தோறும் 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணங்களால் உலகின் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைது விட்டது. அதனால் நேற்று கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் குறுஞ்செய்தி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம். நாட்டில் தேவைக்கு அதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதாக விளக்கம் அளித்துள்ளது.
- கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் 200 - க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் சென்னை எழும்பூரில் தூய்மை இந்தியா இரு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா வருகிற 15 - ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை தலைமை ஏற்று நடத்திய எச்.பி.சி.எல் தலைமை பொது மேலாளர் சஞ்சய் மாத்தூர், பொது மேலாளர் ராகேஷ் குப்தா , மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர் நடராஜன், துணை பொதுச்செயலாளர் சேது முத்து ராமலிங்கம், எச்.பி.சி.எல் ஓபிசி அசோசியேசன் சவுத் ஜோன் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் ஓ பி சி சவுத் ஜோன் ஆகியோர் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி விளக்கி பேசினர். பேரணியில் மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 200 - க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.






