என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் மீது பட்டாசுகளை வீசினர்"
- ஆத்துமேடு டாஸ்மாக் கடை அருகே வந்த போது அங்கு சாலையோரம் நின்றிருந்த வாகனத்தை ஓரமாக நிறுத்தி வைக்குமாறு கூறினார். மேலும் பட்டாசு வெடித்துக் கொண்டு ஆடிப்பாடி வந்தவர்களை ஓரமாக செல்லுமாறு கூறினார்.
- போலீஸ்காரருக்கும் ஆட்டம் போட்டு வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் சிலர் பட்டாசைக் கொளுத்தி போலீஸ்காரர் பாலமுருகன் மீது வீசினர். மேலும் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளினர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகரில் மாரியம்மன், மதுரைவீரன் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் கரகத்தை ஆற்றில் விடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீஸ்காரர் பாலமுருகன் என்பவர் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
ஆத்துமேடு டாஸ்மாக் கடை அருகே வந்த போது அங்கு சாலையோரம் நின்றிருந்த வாகனத்தை ஓரமாக நிறுத்தி வைக்குமாறு கூறினார். மேலும் பட்டாசு வெடித்துக் கொண்டு ஆடிப்பாடி வந்தவர்களை ஓரமாக செல்லுமாறு கூறினார்.
இதில் போலீஸ்காரருக்கும் ஆட்டம் போட்டு வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் பட்டாசைக் கொளுத்தி போலீஸ்காரர் பாலமுருகன் மீது வீசினர். மேலும் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளினர்.
இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீஸ்காரரை தாக்கிய தம்மனம்பட்டியைச் சேர்ந்த ராஜபாண்டி (30), காசாநகரைச் சேர்ந்த குமரேசன் (32), அண்ணாநகரைச் சேர்ந்த காட்டுப்பூச்சி என்ற மாரிமுத்து (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய குங்குமகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வடிவேல் (35), அய்யனார் நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (40) ஆகியோரை தேடி வந்தனர். இதில் ராஜபாண்டியின் செல்போன் சேனன் கோட்டை காட்டுப்பகுதியில் கிடந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இந்த தாக்குதலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என தேடி வந்தனர். இன்று காலையில் வடிவேலை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்






