என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் திருக்கல்யாண உற்சவம்"

    • 35 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பழமை வாய்ந்த ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்களின் முயற்சியால் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் யாக சாலை பூஜைகளுக்கு பின்னர் பட்டாச்சாரியார்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நேற்று மாலை பெருமாள் திருக்கல்யாண உற்சவமும், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது

    முன்னதாக நேற்று முன்தினம் மகாரண்யம் முரளிதர சுவாவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×