என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவி"

    • வினோத் காந்தி வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில், மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தூய்மை பணியாள ர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கி, அம்மூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்க்கு வேட்டி,சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ், துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பெரியசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், சிவா,வேதா சீனிவாசன் உள்பட தி.மு.க மற்றும் சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×