என் மலர்
நீங்கள் தேடியது "கல்வெட்டை திறந்து வைத்து கட்சி கொடியேற்றி"
- கல்வெட்டு திறக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் பகுதியில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை பயண நினைவு கொடியேற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து கட்சி கொடியேற்றி வைத்து பேசினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் அருண்குமார், மாமண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா பிரகாஷ், வர்த்தகர் அணி வி.எல்.சி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






