என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை அமைப்பாளர்கள் நியமனம்"

    • புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தடங்கம் சுப்பிரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
    • தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்டத் துணை அமைப்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களுக்கும் தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமனம் செய்து இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதன்படி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக எம்.ஜி.எஸ் வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோன்று தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்களாக கே.ஆர்.சி. செல்வராஜ், பெ.ராஜகோபால், என்.எஸ். கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன், அசோக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்டத் துணை அமைப்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன் மகேஸ்வரன், நகர துணை செயலாளர் முல்லைவேந்தன், கோமளவள்ளி ரவி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×