என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டகை அமைக்க வேண்டும்"

    • 876 விவசாயிகள் 4600 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
    • பருத்தி மூட்டைகள் மழையில் நனையாதவாறு கொட்டகை அமைக்க வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் நடத்தப்படும் பருத்தி ஏலத்தில் ரூ 1.10 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

    இதில் பாப்பி ரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சுற்றுவட்டார பகுதிகளான பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, பூதநத்தம், ஈச்சம்பாடி, பள்ளிப்பட்டி, முத்தனூர், கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 876 விவசாயிகள் 4600 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதில் மொத்தம் ஒரு கோடியே 10 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகமானது நடைபெறுகிறது.

    குறிப்பாக வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் நடை பெறும் இந்த பருத்தி ஏலத்தில் பருத்தி உற்பத்தி யாளர்கள் கொண்டு வரும் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்து விடு கின்றனர்.

    அப்போது மழைக்கா லங்களில் தங்களுடைய பருத்தி மூட்டைகள் நனையும் பொழுது மூட்டைக்கு மூன்று கிலோ எடையை குறைத்து எடுத்துக் கொள்கின்றனர்.

    அதேபோல இங்கு கொண்டுவரும் பருத்திகள் அழுக்கு படிந்து உற்பத்தி செய்த வியாபாரிகளின் மனசு நொந்து போகும் வகையில் இந்த தரை தளம் இருக்கிறது.

    இதனால் ஏலத்துக்கு எடுக்கும் நபர்கள் மிக குறைந்த விலைக்கு தரத்தை பார்த்து எடுத்துக் கொள்கின்றனர். என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பருத்தி மூட்டைகள் மழையில் நனையாதவாறு கொட்டகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும், இதனால் தாங்கள் கொண்டு வரும் மூட்டை களுக்கு மூன்று கிலோ எடை குறைத்து எடுத்துக் கொண்டால் தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப் படுகிறது என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ×