என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 பவுன் நகை சீர்வரிசை"

    • வரதட்சனை கேட்டு அவரது மகளை தாய் வீட்டிற்கு அனுப்பியதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார். போலீசார் இறந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 65) என தெரிய வந்தது. ஜெகநாதன் தனது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

    அப்போது 30 பவுன் நகை, சீர்வரிசை பொருட்களை கொடுத்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜெகநாதன் மருமகன் கூடுதல் வரதட்சனை கேட்டு அவரது மகளை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    இதனால் விரக்தியில் இருந்த ஜெகநாதன் நேற்று முன்தினம் இரவு கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×