என் மலர்
நீங்கள் தேடியது "மரக்கன்று நட்டு சாதனை"
- கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி உலக சாதனைக்காக 1 மணி நேரத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டது.
அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் காட்டுபுத்தூர் ஊராட்சியில் நடந்த விழாவிகக்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகோபி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கணியம்பாடி ஒன்றியகுழு துணை தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பென்னாத்தூர் தி.மு.க. பேரூர் செயலாளர் அருள்நாதன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதேபோல் ஊசூர் அடுத்த தெள்ளூர் ஊராட்சியில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் தலைமை தாங்கினார்.
ஊராட்சி செயலாளர் முகிலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.






