என் மலர்
நீங்கள் தேடியது "ஓய்வுகால பணம்"
- தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ஓய்வூதிய பணப்பன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
- இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமனம் உத்தரவுகளை வழங்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் தமிழக முதல்-அமைச்சர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தேர்தல் பரப்புரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நவம்பர் 2015 முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை தி.மு.க ஆட்சிக்கு வந்த நூறு நாளில் வழங்கப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும்.
ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வுகால பணப்பலன்களை வழங்க வேண்டும்.
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல் படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை அரசு கருவூலம் வழியாக அரசே வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்றவர்களுக்கு ஊதிய ஒப்பந்த பணப்பலன்களை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஜனவரி 2023 வரை பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விஆர்எஸ் பெற்ற அனைவருக்கும் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ஓய்வூதிய பணப்பன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமனம் உத்தரவுகளை வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால் சென்னையில் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் 90 மாதம் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் அரசு அறிவிக்கும் வரை காலவரையின்றி போராட்டத்தை நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






