என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நடத்துனர் சாவு"

    • எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பெருமகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 56). இவர் அரசு பஸ் நடத்துனராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமான நிலையில் மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரா மலிங்கம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் மத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    அந்த சாலை வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×