என் மலர்
நீங்கள் தேடியது "உயிரை மாய்த்த தொழிலாளி"
- தருமபுரியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
- ஜெயவேல் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி நரசையர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 15 வயது யுவராஜ் என்ற மகனும், 13 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
ஜெயவேல் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயவேல் குடும்ப சூழ்நிலை காரணமாக தருமபுரியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
24 மாத காலத்தில் தவணையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 20 மாதங்கள் கடனை திருப்பி செலுத்திய நிலையில் மீதம் 4 மாத கடனை திருப்பி செலுத்தவில்லை.
இதனால் அந்த நிறுவனம் நெருக்கடி கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த ஜெயவேல் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






