என் மலர்
நீங்கள் தேடியது "உறுப்பினர்கள் பதவி ஏற்பு"
- அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் பதவி ஏற்பு விழா தருமபுரி குமாரசா மிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் அறங்காவலர் குழு உறுப்பி னர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமி ப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சேகரன், முருகவேல், விக்னேஷ், சதீஷ்குமார் மற்றும் சண்முகசுந்தரி பாரி ஆகியோர் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டு ள்ளனர். புதிதாக நியமிக்க ப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் பதவி ஏற்பு விழா தருமபுரி குமாரசா மிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் அறங்காவலர் குழு உறுப்பி னர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அறங்காவல குழு தலைவராக சேகரன் தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாக பொறு ப்பேற்றுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்களை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நேரில் வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கவுதமன், முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.






