என் மலர்
நீங்கள் தேடியது "அம்மனுக்கு அபிஷேக நிகழ்ச்சி"
- சிறு குழந்தைகள் தங்களுக்கு கல்வி மற்றும் ஆரோக்கியம் கிடைத்திட அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது.
- அரிசி மாவு பொடி, திரவிய பொடி ஆகிய ஐந்து வகையான திரவிய நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வேறு எந்த கோவிலிலும் நடைபெறாத வகையில் சிறு குழந்தைகள் தங்களுக்கு கல்வி மற்றும் ஆரோக்கியம் கிடைத்திட அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது.
அந்த வகையில், 14 -வது ஆண்டு நிகழ்ச்சியாக, 6 மாத குழந்தை முதல் 7 வயது சிறுவர்,சிறுமியர் வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறு குழந்தைகள் முதல் 7 வயது சிறுவர்,சிறுமியர் வரை வரிசையாக நின்று அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள் பொடி, அரிசி மாவு பொடி, திரவிய பொடி ஆகிய ஐந்து வகையான திரவிய நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அப்போது தங்களுக்கு கல்வி ஞானம் கிடைக்க வேண்டும், ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அம்மனை வேண்டிக்கொண்டனர். அதனை தொடர்ந்து கோயிலில் குழந்தைகளுக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டி ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.
இந்த விழாவில், ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மனை வேண்டி வழிபாடு செய்து சென்றனர்.






