என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் சுத்திகரிப்பான்"
- முன்னாள் மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிக்கு உதவிடும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரம் வழங்கினர்.
- இவர்களில் ஒரு மாணவன் தற்போது சென்னை ஐஐடி யில் படித்து கொண்டு இருப்பது இப்பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை முடித்த முன்னாள் மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிக்கு உதவிடும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரம் வழங்கினர்.
இந்நிகழ்வில் பொறுப்பு தலைமை ஆசிரியர் மஞ்சுநாதன், உதவி ஆசிரியர் இராம்குமார், தற்காலிக ஆசிரியர் அனிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோகிலா, பாரதி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கிய முன்னாள் மாணவர்களான விநோதினி, ரஞ்சிதா, பியங்கா, பாரதி, பிரே ம்குமார், கோகுல், விக்னேஷ், அருண்குமார், பாண்டியன், கார்த்தி, நவீன்குமார், ராமன், லட்சுமணன், பிரபு, சுரேந்தர் ஆகியோருக்கு பள்ளியின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு மாணவன் தற்போது சென்னை IIT யில் படித்து கொண்டு இருப்பது இப்பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறது.






