என் மலர்
நீங்கள் தேடியது "கிசான் ஊக்கத்தொகை"
- அரக்கோணம் வட்டார வேளாண்மை மையம் அறிவிப்பு
- வருகிற 27-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்
அரக்கோணம்:
பிரதம மந்திரியின் கிசான் ஊக்கத்தொகை 4 மாதத்திற்கு ரூ 2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
14-வது தவணை தொகையை பெற வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 27-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நிதி வரவு நிறுத்தப்படும்.
எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை இணைத்தும் e KYC செய்தும் பயனடையுமாறு அரக்கோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி தெரிவித்துள்ளார்.






