என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா தியான பயிற்சி விழா"

    • கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
    • 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமையாசிரியர் மாணவ, மாணவியர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் மன அமைதியை பெறலாம்.

    ரத்த ஓட்டத்தைச் சீராக்கலாம். இதயத்தை பலமடையச் செய்யலாம். மன அழுத்தத்தை போக்க லாம். வாழ்நாளை நீட்டிக்கலாம். உடல் நலத்தை பாதுகாக்கலாம். சுறுசுறுப்பாக இயங்கலாம் என்று பேசினார்.

    யோகா பயிற்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் பேராசிரியர்களான ஜெகன் ராமமூர்த்தி, ஸ்டீபன்விக்டர் ஆண்டனி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    பயிற்சி விழாவில் அனைத்து துறை பேராசிரி யர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×