என் மலர்
நீங்கள் தேடியது "திடீரென மயங்கி கீழே விழுந்தார்"
- மருத்துவமனைக்கு கொண்டு ெசல்லும் வழியில் இறந்தார்
- போலீசார் விசாரணை
தூசி:
செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளையை சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மகன் சுரேஷ் குமார். (வயது 38). இவர் செய்யாறு ஆக்கூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 3 வருடங்களாக அங்கேயே தங்கி பல் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் நேற்று காலை செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆக்கூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மோகன் குமார் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






