என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளம் தோண்டிய பொதுமக்கள்"
- 1½ நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்
- தாசில்தாரிடம் புகார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்டமூக்கனூர் அடுத்த அடியத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சாமுடி இவரது மகன்கள் மகேந்திரன் மற்றும் பெருமாள் ஆகியோர் நிலத்திற்கு நடுவில் 10 அடியளவில் செல்லும் சாலையை சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 75 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
நிலத்தினை வழி பாதையாக தொடர்ந்து செல்ல பாதை அமைக்க வழி விடமாட்டோம் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரு குடும்பத்தார்கள அனைவரும் பொது வழியினை அவர்களும் பயன்படுத்த கூடாது என்று அவர்கள் வீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் பள்ளம் அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு குடும்பத்தினர் அன்றாட வேலைகளை எங்களால் வெளியே செல்ல வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை இது குறித்து மேற்கொண்ட 2 குடும்பத்தினர் நேற்று நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரியிடம் புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அப்போது இரு தரப்பினரும் வரவழைத்து சுமார் 1½ நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் அடுத்த வாரம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்களை தலைமையில் இப்பிரச்சினை தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடைபெறுவதால் பொதுமக்களால் தோண்டப்பட்ட பள்ளத்தினை மண் கொட்டி அடைத்தனர். இதனால் மேற்படி இரு குடும்பத்திற்கும் வழி கிடைத்ததால் சமரச பேச்சுவார்த்தை ஏற்படுத்தப்பட்டது.
உடன் மண்டல துணை வட்டாட்சியர் பூபதி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்பபட பலர் கலந்து கொண்டனர்.






