என் மலர்
நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளிகள் பலி"
- விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனர்.
- அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஜெட்டாய் மோச்சி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
உத்தரபிரதேசம் மாநிலம் நரசிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்லால் (வயது58). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அங்கேயே தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 8-ந் தேதி சுந்தர்லால் காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டப்பட்டியில் ஒரு தனியார் பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து சுந்தர் லால் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பம் குறித்து இறந்தவரின் நண்பர் கிரஷத்தி என்பவர் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் மோரா பகுதியைச் சேர்ந்தவர் ஜெட்டாய் மோச்சி (65). கூலித்தொழிலாளியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து ஜெட்டாய் மோச்சி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஜெட்டாய் மோச்சி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.






