என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிக்கால்வாய்"

    • குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுக்கா அலுவலக கூட்டரங்கில் தாசில்தார் பாலசந்தர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், மண்டல துணைதாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் நெமிலி வேளாண்மை துறைக்கு புதிய சேமிப்பு கிடங்கு கட்டவேண்டும். நெல் அறுவடை பருவத்திற்கு கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும். இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்.

    ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிக்கால்வாய், குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன்உதவி பெறவழிவகை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

    இதில் வேளாண்மை உதவி இயக்குநர் அருணாகுமாரி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல்அலுவலர் சரவணன், விவசாய சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், சுபாஷ், சுப்பிரமணி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    ×