என் மலர்
நீங்கள் தேடியது "பெற்றோர்கள் கலந்து கொண்டனர்"
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் ஜாவித்அகமது, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பிபாபு, ஆர். கோபாலகிருஷ்ணன், கே.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜி. அகிலா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியைகள் எஸ்.தீபா, டி.கே.சரவண ஸ்ரீபிரியா உள்பட ஆசிரியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.






