என் மலர்
நீங்கள் தேடியது "ரெயிலில் பாய்ந்து சாவு"
- பெற்றோரை இழந்து குழந்தை தவிப்பு
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(27),மேஸ்திரி.
இவரது மனைவி பவித்ரா(25) இருவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.கடந்த சில மாதங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பவித்ரா சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பவித்ரா வீட்டில் இருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பிரம்மபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காதல் மனைவி திடீரென இறந்ததால் ராஜசேகர் அதிர்ச்சி அடைந்தார். பைக்கில் பிரம்மபுரம் தண்வாளம் அருகே சென்றார். அப்போது வந்த சகரக்கு ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் பவித்ரா மரணம் தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






