என் மலர்
நீங்கள் தேடியது "கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும்"
- எஸ்.சி,எஸ்.டி பிரிவு விவசாயிகளுக்கு 40 வழங்கிட அரசு ஒதுக்கீடு செய்துள்ளது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மானிய விலையில் பவர் டில்லர் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை எந்திரம யமாக்கல் திட்டத்தில் உழவு பணிகளுக்கு பவர் டில்லர் 2-வது தவணையாக பொது பிரிவினருக்கு 84, எஸ்.சி,எஸ்.டி பிரிவு விவசாயிகளுக்கு 40 வழங்கிட அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானிய விலையில் பவர் டில்லர் சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் ஆதி ிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், பவர் டில்லர் எந்திரத்தின் விலைப்புள்ளி, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளாக இருப்பின் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் விரிவாக்க மையம், அணைக்கட்டு ரோடு, வாலாஜா என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






