என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்"

    • 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்
    • வருகிற 15-ந் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள கிளைச்சிறையில் காலியாக உள்ள 3 தூய்மை பணியாளர் பணியிடம் சமையலர் பணியிடம் காலியாக உள்ளது. தூய்மை பணியாளர் பதவிக்கு கல்வி தகுதி தமிழில் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.

    சமையலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 37, இதர வகுப்பினருக்கு 34 ஆகும். முன்னுரிமைக்கான சான்றிதழ் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கல்வி இதர சான்றிதழ்களுடன் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சிறைக்கண்கா ணிப்பாளர், மத்திய சிறை, வேலூர்- 02 என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும் என வேலூர் ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    ×