என் மலர்
நீங்கள் தேடியது "சிறுதானிய உணவு விழா"
- நிகழ்ச்சியில் சுமார், 100 -க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
- மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேரு யுவகேந்திரா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த சிறுதானிய உணவு விழாவை நடத்தியது. மாவட்ட கலெக்டர் சரயு விழாவை தொடங்கி வைத்து, சிறந்த முறையில் சிறுதானிய உணவு தயாரித்த, 6 அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்களும், வட்டார அளவிலான குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு கேடயங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார், 100-க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில், 250 நபர்களும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நேரு யுவ கேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் குன்முகமது, மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத் குமார், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






