என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை மீண்டும் திறப்பு"

    • போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது
    • வாகன ஓட்டிகள் எளிதில் சென்று வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நெரிசலை தடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மார்க்கமாக வேலூருக்கு வரும் பஸ்கள் கலெக்டர் அலுவலகம்- கிரீன்சர்க்கிள் இடைப்பட்ட பகுதியில் சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு பதிலாக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நேராக அனுப்பி வைக்கப்பட்டன.

    இதேபோல் வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் அருகே இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பெட்ரோல் பங்க் அருகே சென்று சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கிரீன்சர்க்கிள் அகலம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் வரும் வாகனங்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வகையில் கிரீன் சர்க்கிள் ஒரு பகுதி உடைக்கப்பட்டு அதில் சாலை உருவாக்கப்பட்டது. அதன் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த மாதம் அந்தப் பாதையில் தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்தனர். கிரீன் சர்கிளை உடைத்து போடப்பட்ட சாலை மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    அந்த சாலை மாட்டு தொழுவமாக மாறியது. ஏராளமான மாடுகள் அதில் படுத்து கிடந்தன.

    நேற்று முதல் மீண்டும் மூடப்பட்ட சாலை திறக்கப்பட்டது. இதனால் தோட்டப்பாளையம் பகுதியில் இருந்து வாகன ஓட்டிகள் எளிதில் சென்று வருகின்றனர். அந்த பகுதியில் நெரிசல் குறைந்துள்ளது.

    ×