என் மலர்
நீங்கள் தேடியது "ஆரணி டவுன் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடைபெற்றது"
- அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- 500-க்கும் மேற்பட்ேடார் பங்கேற்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தாசில்தார் அலுவலகம் எதிரில் திருண்ணாமலை வடக்கு சார்பாக சாராயம், கஞ்சா போதை போன்றவற்றை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தூசி மோகன் தலைமை தாங்கினார்.
ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் அசோக் குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏக்கள் பன்னீர் செல்வம், பாபு முருகவேல், நளினி மனோகரன், குணசீலன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரன், சங்கர், திருமால், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பையூர் சதிஷ், நகர மாணவர் அணி செயலாளர் குமரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.






