என் மலர்
நீங்கள் தேடியது "550 பேர் நேரடியாக பதக்கம் பெற உள்ளனர்"
- 14 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்
- பிளஸ்-2 முடித்தவர்கள் நேரடியாக முதுகலை பட்ட படிப்பில் சேரலாம்
வேலூர்:
திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற ஜூன் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி வி.கே. சிங் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.
இந்த விழாவில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பட்டம் பெற உள்ளனர். விழாவில் முனைவர் பட்டம் மற்றும் பட்டப் படிப்புகளில் சாதனை படைத்த 550 பேர் நேரடியாக பதக்கம் பெற உள்ளனர்.
மற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளில் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு 14 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., உள்ளிட்ட 5 வருட முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஒரு வருட டிப்ளமோ படிப்புகள் இதில் தொடங்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 படித்த மாணவ மாணவிகள் நேரடியாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






