என் மலர்
நீங்கள் தேடியது "4.67 ஏக்கர் நிலம் மீட்பு"
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் ஏமப்பள்ளி கிராமத்தில் உள்ளது.
- மொத்தமாக 4.67 ஏக்கர் நிலங்கள் உள்ளதால் அவற்றை அளவீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் ஏமப்பள்ளி கிராமத்தில் உள்ளது. மொத்தமாக 4.67 ஏக்கர் நிலங்கள் உள்ளதால் அவற்றை அளவீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி செயல் அலுவலர் ரமணி காந்தன், அறங்கா வலர் குழு தலைவர் தங்க முத்து, அறங்காவலர் தங்க முத்து, கோவில் பணி யாளர்கள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது.
நாமக்கல் இந்துசமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள்துறை தனி தாசில்தார் சுந்தரவள்ளி, துணை தாசில்தார் குப்பு சாமி ஆகியோர் தலைமை யில் நில அளவையர்கள் நிலங்களை அளவீடு செய்து அளவை கற்கள் நட்டனர்.






