என் மலர்
நீங்கள் தேடியது "ஆடு முட்டி சாவு"
- மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி, வட விரிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்கபந்து (வயது83). இவர் ஆட்டுக்கிடாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்தார்.
தான் வளர்க்கும் ஆட்டு கிடாவை தினமும் மேச்ச லுக்காக வயல்வெளிக்கு ஒட்டி செல்வது வழக்கம்.
நேற்று மாலை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது ஆட்டு கிடா எதிர்பாராத விதமாக திடீரென மார்கபந்தை முட்டி தள்ளியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த மார்க்க பந்து சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






