என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சக்கணக்கான பக்தர்கள்"

    • நாளை தேரோட்டம் நடக்கிறது
    • கூடுதலாக 15 சிறப்பு பஸ் கள் இயக்கப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருவிழாவான, குடியாத்தம் கெங்கையம்மன் சிரசுத்திரு விழா தொடங்கி நடந்து வருகிறது.

    திரளாக பங்கேற்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் உள்ளூர் விடு முறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவில் தேரோட்டம் நாளை காலை 8 மணிக்கு நடக்கிறது. திங்கட்கிழமை (15-ந் தேதி) அதிகாலை சிரசு ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த திரு விழாவுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில், வேலூர் மண் டல அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

    அதன்படி, வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 30 பஸ்களை தவிர்த்து, கூடுதலாக 15 சிறப்பு பஸ் கள் இயக்கப்பட உள்ளது. இதேபோன்று, ஆம்பூர் - குடியாத்தம், பேரணாம் பட்டு - குடியாத்தம் வழித் தடத்தில் தலா 5 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும், பக்தர்கள் எண் ணிக்கை அதிகமாக இருக் கும் நேரங்களில், அதற்கு ஏற்றவகையில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சிரசு ஊர்வலம் கோவிலில் அம்மனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர்.

    இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பெண் பக்தர்களிடம் நகை பறித்துள்ளனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரேவதி, ஜெயந்தி, சீதா என்ற 3 பெண்களிடம் 15 சவரன் நகைகளை பறித்து சென்று விட்டனர்.

    இந்த திருவிழாவில் மேலும் பெண்களிடம் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு உரிய புகார்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அணிந்து வரக்கூடாது என்று அறிவுறுத்தி வந்தனர்.

    தங்கள் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இருப்பினும் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×