என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர் உயிரிழப்பு"

    • பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
    • இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து காஷ்மீர் முழுவதும் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள துடு-பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதையடுத்து பசந்த்ஃகர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை தேடியபோது துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஒயிட் நைட் கார்ப்ஸ் படை வீரர் வீர மரணமடைந்தார்.

    • மல்புரா பகுதியில் பாராசூட் தரை இறங்குவதற்கான மண்டலத்தை நோக்கி ராணுவ வீரர் குதித்தார்.
    • பாராசூட் கயிறு எரிந்து, அங்குர் சர்மா, உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார்.

    ஆக்ரா:

    காஷ்மீரை சேர்ந்தவர் ராணுவ கமாண்டோ வீரர் அங்குர் சர்மா. இவர், விமானத்தில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்து பயிற்சி எடுப்பதற்காக, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு சென்றார்.

    நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பயிற்சியில் கலந்து கொண்டார். விமானத்தில் பயணித்த அவர், 8 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்தார்.

    மல்புரா பகுதியில் பாராசூட் தரை இறங்குவதற்கான மண்டலத்தை நோக்கி அவர் குதித்தார். முதலில், சரியான பாதையில் தரையை நோக்கி வந்தார். திடீரென பலத்த காற்று வீசியதால், அவர் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் பாராசூட் விலகி சென்றது. அந்த பாதையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பாராசூட் சிக்கிக் கொண்டது. அடுத்த சில வினாடிகளில் பாராசூட் தீப்பிடித்துக் கொண்டது.

    இதனால் பாராசூட் கயிறு எரிந்து, அங்குர் சர்மா, உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார். அவர் தீக்காயமும் அடைந்தார். அவரை ஆக்ரா ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, அங்குர் சர்மா உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×